search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மைய இயக்குனர்"

    கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார். #NorthEastMonsoon #Rain
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.



    தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

    இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.

    15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.

    கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.

    பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.

    இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain
    நவம்பர் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, 8-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #RainAlert #RMD #IMD
    சென்னை:

    தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கடந்த 1-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது.

    சென்னையில் 3 நாட்கள் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மழை அவ்வபோது பெய்தது. வெயிலும், மழையும் மாறி மாறி நீடித்தது. தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

    இந்தநிலையில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாப நாசத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி வழியாக நகர்ந்து செல்லும்.

    இதன்காரணமாக வருகிற 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பருவமழை மேலும் வலுப்பெறும். கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



    தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 6-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 7-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையும் கடல்காற்று மணிக்கு 50 கி.மீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.

    எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள் 6-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும், நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், கனமழை இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். #RainAlert #RMD #IMD
    தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்றும், 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்றும், 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:-

    கடந்த மே மாதம் 29-ந் தேதி தமிழகத்தின் தென் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இப்போது தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியிலும் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக தொடங்கி உள்ளது.

    அடுத்த 2 நாட்களில் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க அனைத்து சாதகமான வாய்ப்புகளும் உள்ளன.

    வங்க கடலின் மத்திய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, அரியலூர் 13 செ.மீ., திருவிடைமருதூர் 7 செ.மீ, திருத்துறைப்பூண்டி 5 செ.மீ., ஒகேனக்கல், தாமரைப்பாக்கம், சூளகிரி, சின்னக்கல்லாறு, சேலம், காரைக்கால் தலா 4 செ.மீ., தஞ்சை, உளுந்தூர்பேட்டை, மாரண்ட அள்ளி தலா 3 செ.மீ., வால்பாறை, செந்துறை, காமாட்சிபுரம், குளித்தலை, பாபநாசம், செங்கல்பட்டு, ஊத்தங்கரை, குளச்சல், வலங்கைமான் தலா 2 செ.மீ., திருமானூர், வேடசந்தூர், குந்தாபாலம், கும்பகோணம், குழித்துறை, வையூர், முசிறி, சங்கராபுரம், புதுச்சேரி, ஆத்தூர், ஜெயங்கொண்டம், காஞ்சீபுரம், தர்மபுரி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    ×